Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மேலும் 9 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று- மொத்தம் 67 பேருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 9 பேருக்குப் புதிதாக COVID-19 கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 9 பேருக்குப் புதிதாக COVID-19 கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 67.

புதிதாகக் கிருமி தொற்றியவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள்.

இரண்டு தேவாலயங்கள், சீன மருத்துவ நிலையம், Grand Hyatt ஹோட்டல், கட்டுமானத் தளம் ஆகியவற்றுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் தொடர்பு இருப்பது அடையாளம் காணப்பட்டது.

புதிதாகக் கிருமி தொற்றிய 9 பேரில் அறுவருக்கும் Grace Assembly of God தேவாலயத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, மேலும் இருவர் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 17 பேர் COVID-19 கிருமிப் பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

6 பேரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்