ஃபெங்சான் PCF Sparkletots பாலர்பள்ளியில், மேலும் ஓர் ஆசிரியருக்கு COVID-19 கிருமித்தொற்று
ஃபெங்சான் PCF Sparkletots பாலர்பள்ளியில், மேலும் ஓர் ஆசிரியருக்கு COVID-19 கிருமித்தொற்று
பிடோக் நார்த்தில் அமைந்துள்ள ஃபெங்சான் PCF Sparkletots பாலர்பள்ளியில், மேலும் ஓர் ஆசிரியருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரையும் சேர்த்து அங்கு மொத்தம் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பாலர்பள்ளியில் பயிலும் குழந்தைகள் ஐவருக்கு உடல் நலமில்லை. ஆனால், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஃபெங்சான் PCF Sparkletots பாலர் பள்ளி ஏப்ரல் 7ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளது.
தீவு முழுவதும் உள்ள 360 PCF Sparkletots பாலர்பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
பாதிப்பு ஏதும் இல்லாத பாலர்பள்ளிகளுக்கு இரண்டு வார கட்டாய விடுப்பு பொருந்தாது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
PCF Sparkletots அமைப்பின் மற்ற பாலர்பள்ளிகளில் COVID-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.
பாலர்பள்ளிகள்,
சிங்கப்பூரின் அத்தியாவசியச் சேவைகளில் ஒன்று என்று குறிப்பிட்ட திரு.லீ, யாரையும் பழி சுமத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றார்.
அன்பிற்குரியவர்களைப் பாதுகாக்க, வலுவான நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதாக அவர் பெற்றோருக்கு உறுதியளித்தார்.