சிங்கப்பூர் அதன் நலனைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்: அமைச்சர் விவியன்
சிங்கப்பூர் அதன் நலனைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உறுதிகூறியுள்ளார்.
சிங்கப்பூர் அதன் நலனைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உறுதிகூறியுள்ளார்.
மற்ற நாடுகள் சிங்கப்பூரிடம் அதன் பலத்தைக் காட்ட எண்ணக்கூடாது என்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
இது போன்ற விவகாரத்தில் கண்டிப்பாகவும் அதே சமயம் பொறுமையாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் மலேசியா இருதரப்பு உறவு குறித்து, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சிங்கப்பூரின் நீர், ஆகாய வெளிகளில் மலேசியா தொடர்ந்து அத்துமீறினால்
வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.