சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தில் தீ
சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தில் இன்று பிற்பகல் தீ மூண்டது.
சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தில் இன்று பிற்பகல் தீ மூண்டது.
அரும்பொருளகத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
கட்டுமானப் பொருள்களால் தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
71 பிராஸ் பாசா ரோட்டில் அமைந்துள்ள அரும்பொருளகத்தில் தீ மூண்டது குறித்து பிற்பகல் சுமார் 3 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் இயந்திரம் கொண்டு தீ அணைக்கப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
தீக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டுவருவதாகக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.