Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெலோக் பிளாங்கா கிரெசென்டில் தீச் சம்பவம் - ஒருவர் மருத்துவமனையில்

தெலோக் பிளாங்கா கிரசென்ட், புளோக் 4 இல் உள்ள ஒரு வீட்டில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பற்றி எரிந்தது. 

வாசிப்புநேரம் -
தெலோக் பிளாங்கா கிரெசென்டில் தீச் சம்பவம் - ஒருவர் மருத்துவமனையில்

படம்: Pricilla Lum

தெலோக் பிளாங்கா கிரசென்ட், புளோக் 4 இல் உள்ள ஒரு வீட்டில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பற்றி எரிந்தது.

அது குறித்து இரவு ஒன்பதரை மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமை தற்காப்பு படையினர் கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்த ஒரு பெண் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மற்ற இருவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற மறுத்து விட்டனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் சுமார் 40 பேர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு இரவு சுமார் 11 மணியளவில் குடியிருப்பாளர்கள் அவர்களின் வீடுகளுக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்