Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூக்குழியில் விழுந்த பக்தரின் உடல்நிலை சீராக உள்ளது: இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ மாரியம்மன் கோயில்

சவுத் பிரிட்ஜ் ரோட்டின் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர் ஒருவர், பூக்குழியில் தவறி விழுந்துவிட்டார்.

வாசிப்புநேரம் -

சவுத் பிரிட்ஜ் ரோட்டின் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர் ஒருவர், பூக்குழியில் தவறி விழுந்துவிட்டார்.

பூக்குழியிலிருந்து உடனே வெளியே கொண்டுவரப்பட்ட அவர், ஆலயத்தில் இருந்த மருத்துவக் குழுவினரால் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காயங்களுடன் தப்பிய அந்தப் பக்தரின் உடல்நிலை சீராக உள்ளது.

சம்பவத்தின்போது பக்தரைக் காப்பாற்ற சென்ற இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

அவர்களும் தேறி வருவதாக அறிக்கையில் சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்