Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹவ்காங் காப்பிக் கடையில் கைகலப்பு - ஐவர் கைது

கைகலப்பில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -
ஹவ்காங் காப்பிக் கடையில் கைகலப்பு - ஐவர் கைது

படம்: Screengrab from Facebook video

கைகலப்பில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

52 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட 4 ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

இம்மாதம் 9ஆம் தேதி, ஹவ்காங் அவென்யூ 8-இல் உள்ள காப்பிக் கடையில் நேர்ந்த கைகலப்பின் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அங் மோ கியோ காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட புலனாய்வுக்குப் பிறகு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 11) சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இரண்டு குழுக்களுக்கிடையே காப்பிக் கடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

கைகலப்பில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்