Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

5 நிலத் தொகுதிகள் பொதுக் குத்தகைக்கு வெளியீடு

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் வேளாண்மைக்கான 5 நிலத் தொகுதிகளைப் பொது குத்தகைக்கு வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
5 நிலத் தொகுதிகள் பொதுக் குத்தகைக்கு வெளியீடு

படம்: AFP

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் வேளாண்மைக்கான 5 நிலத் தொகுதிகளைப் பொது குத்தகைக்கு வெளியிட்டுள்ளது.

அவற்றுள் 3 நிலத் தொகுதிகள் உணவு வகைகளுக்கானவை. அவை லிம் சூ காங்கிலும் சுங்கை தெங்காவிலும் அமைந்திருக்கும்.

அங்கு உணவு தானியங்களைப் பயிரிடுவதோடு, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்க்கமுடியும். கடல் உணவு வகைகள், தவளை போன்றவற்றின் பண்ணைகளையும் அங்கே அமைக்கலாம்.

மற்ற 2 நிலத் தொகுதிகள் மற்ற வகையான வேளாண்மைக்கு உரியவை. அவை சுங்கை தெங்காவில் அமைந்திருக்கும்.

அங்கு அலங்கார மீன்கள், அலங்காரப் பறவைகள், கடற்பாசி முதலியவற்றை வளர்க்க முடியும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்