ஜூரோங் ஈஸ்ட், சுவா சூ காங் வட்டாரங்களில் திடீர் வெள்ளம்
சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32, சுவா சூ காங் அவென்யூ 1 ஆகிய இடங்கள், பிற்பகல் மூன்றரை மணியளவில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகக் கழகம் தனது Facebook-இல் குறிப்பிட்டது.
இரண்டு இடங்களிலும் சுமார் 20 நிமிடங்களுக்குப் போக்குவரத்து தடைபட்டது.
பிற்பகல் மூன்றே முக்கால் மணியளவில் வெள்ளம் தணிந்தது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில், ஒரு மணிநேரத்தில் ஆக அதிகமாக 93 மில்லிமீட்டர் அளவுள்ள மழை பதிவானது.