Foodpanda நிறுவனத்தின் உணவு விநியோகத்தில் சேவைத் தடங்கல்கள் - சமூக ஊடகம் ஊடுருவல்
Foodpanda நிறுவனத்தின் உணவு விநியோகத்தில் நேற்று சேவைத் தடங்கல்கள் ஏற்பட்டன. வாடிக்கையாளர்களின் உணவு ஆர்டர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ரத்து செய்யப்பட்டன.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திகுள்)
சிங்கப்பூர்: Foodpanda நிறுவனத்தின் உணவு விநியோகத்தில் நேற்று சேவைத் தடங்கல்கள் ஏற்பட்டன. வாடிக்கையாளர்களின் உணவு ஆர்டர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ரத்து செய்யப்பட்டன.
நிறுவனத்தின் Instagram கணக்கும் தற்போது ஊடுருவப்பட்டுள்ளது. கணக்கின் பெயரும் அதில் இடம்பெறும் நிறுவனத்தின் படமும் மாற்றப்பட்டுள்ளன.
கணக்கில் உள்ள படங்களும் காணொளிகளும் மாற்றப்பட்டுள்ளன. அதன் ரசிகர்களின் எண்ணிக்கையும் மாறிக்கொண்டே உள்ளது.
சமூக ஊடகங்களில் புகார் செய்த ரசிகர்களுக்கு ஆபாச வார்த்தைகளில் திட்டினர் ஊடுருவிகள்.
வாரஇறுதியில் தனது Instagram கணக்கு ஊடுருவப்பட்டதாக இன்று Facebookஇல் தெரிவித்தது நிறுவனம். சேவைத் தடைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நிறுவனம் ஊடுருவிகளிடமிருந்து வரும் தகவல்களுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று கூறியது.
சேவைத் தடைக்கான காரணத்தை நிறுவனம் தெரிவிக்கவில்லை.