தமிழ்மொழிப் பயன்பாட்டினால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் குறைவா?
சிங்கப்பூரில் சீன மொழியைக் காட்டிலும் தமிழ்மொழிப் பயன்பாட்டினால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் குறைவு என இந்தியர்கள் கருதுவதாக அண்மை ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் சீன மொழியைக் காட்டிலும் தமிழ்மொழிப் பயன்பாட்டினால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் குறைவு என இந்தியர்கள் கருதுவதாக அண்மை ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சேனல் நியூஸ்ஏஷியாவும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து ஆய்வை நடத்தின.
சுமார் 2,020 பேர் அதில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இனத்தினர் தங்களது கலாசாரம் மீது கொண்டுள்ள ஆர்வம், ஈடுபாடு பற்றியது அந்த ஆய்வு.
கொள்கை ஆய்வுக் கழகமும், One People.sg அமைப்பும் இணைந்து, இன அடையாளமும் - கலாசாரமும் குறித்த கருத்தரங்குக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளன.
அதில் ஆய்வின் முடிவுகள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது.