Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய ஈமச் சடங்கு இடங்கள்: சிரமங்கள் இருக்கலாம் என நிறுவன உரிமையாளர்கள் கருத்து

ஈமச் சடங்குகளை மேற்கொள்வதற்கு அடுத்த சுமார் 10 ஆண்டுகளில் நான்கு புதிய இடங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியிருந்தது.

வாசிப்புநேரம் -
புதிய ஈமச் சடங்கு இடங்கள்: சிரமங்கள் இருக்கலாம் என நிறுவன உரிமையாளர்கள் கருத்து

(படம்: Jason Quah/TODAY)

ஈமச் சடங்குகளை மேற்கொள்வதற்கு அடுத்த சுமார் 10 ஆண்டுகளில் நான்கு புதிய இடங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியிருந்தது.

அமைப்பின் அறிவிப்பை ஈமச் சடங்கு நிறுவன உரிமையாளர்கள் வரவேற்றாலும் சில சிரமங்கள் இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.

அந்தப் புதிய இடங்கள் தொழில்துறைப் பேட்டைகளில் அமையவிருப்பது அதற்குக் காரணம்.

அன்புக்குரியவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்குப் பலர் எண்ணினாலும் சில சமயம் அச்சடங்குகள் எளிதில் சென்று சேரக்கூடிய இடங்களில் இடம்பெறுவதில்லை என நிறுவன உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

அவ்விடங்களை அடைவதற்கு நெடுந்தொலைவு செல்லவேண்டும் அல்லது கார்களில் பயணம் செய்யவேண்டியிருக்கும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்