பாதுகாப்பு இடைவெளி விதி மீறல் - 19 பேரிடம் காவல்துறை விசாரணை
பாதுகாப்பு இடைவெளி விதி மீறல் - 19 பேரிடம் காவல்துறை விசாரணை
பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றத் தவறிய 19 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Fusionopolis அருகே உள்ள மதுபானக் கூடத்தில் அந்தப் 19 பேரும் மது அருந்திக்கொண்டு, மற்றவர்களுடன் பழகிக்கொண்டிருந்ததாய் நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் 6 மாதச் சிறைத் தண்டனையோ, 10,000 வெள்ளி அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மதுபானக் கூடத்தை நடத்துவதற்கான உரிமங்களும் கடை உரிமையாளரிடம் இல்லை என காவல்துறை தெரிவித்தது.
கடை உரிமையாளர் என நம்பப்படும் 40 வயது மாதும் விசாரிக்கப்படுகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20,000 வெள்ளிவரை அபராதம் விதிக்கப்படலாம்.