சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தனியார் மருந்தகங்களில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது
சுகாதார அமைச்சு, சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தனியார் மருந்தகங்களில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு, சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தனியார் மருந்தகங்களில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
புகைமூட்டம், H1N1 நோய்ப் பரவல் ஆகியவற்றின்போது அந்தத் திட்டம் நடப்பிலிருந்தது.
COVID-19 கிருமித்தொற்று மேலும் 9 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
Public Health Preparedness Clinics எனும் அந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 900 தனியார் மருந்தகங்கள் செயல்படவிருக்கின்றன.
இன்னும் 4 நாள்களில் நடப்புக்கு வரும் அந்தத் திட்டம், COVID-19 கிருமித்தொற்றை விரைவில் கண்டறிந்து சமாளிக்க உதவும்.