Grab நிறுவனம் அதன் கட்டணத்தை அடுத்த மாதத்திலிருந்து உயர்த்தவுள்ளது
Grab நிறுவனம் அதன் கட்டணத்தை அடுத்த மாதத்திலிருந்து உயர்த்தவுள்ளது
Grab நிறுவனம் தனது உணவு, கடை விநியோகங்களுக்கான தளப் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.
கட்டணம் 30 காசாக உயர்த்தப்படும். இந்த மாற்றம் அடுத்த மாதம் 22ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.
கடந்த ஓராண்டில் விநியோகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக Grab அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டது.
அதன் காரணமாக, விநியோகப் பங்காளிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான, செயல்திறன்மிக்க தளத்தை அளிப்பது முக்கியம். அதில் உள்ள பழைய அம்சங்களை மேம்படுத்தவும் புதிய அம்சங்களை உருவாக்கவும் வேண்டும்.
அதற்கான செலவை ஈடுசெய்யவே கட்டணம் உயர்த்தப்படுவதாக நிறுவனம் விளக்கியது.
மோசடிகளைத் தடுப்பதற்கான அம்சங்களையும் மேம்படுத்தத் திட்டமிடுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.