Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்றுடன் நிறைவடையும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை 2018

மாபெரும் சிங்கப்பூர் விற்பனை 2018 இன்றுடன் நிறைவடைகிறது. 25வது முறையாக அது நடைபெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
இன்றுடன் நிறைவடையும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை 2018

கோப்புப்படம்:: AFP/Roslan Rahman

மாபெரும் சிங்கப்பூர் விற்பனை 2018 இன்றுடன் நிறைவடைகிறது.

25வது முறையாக அது நடைபெற்றுள்ளது.

மாபெரும் சிங்கப்பூர் விற்பனைக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே இணைய சில்லறை வர்த்தகம் போட்டியாக இருந்துவந்துள்ளது.

போட்டியைச் சமாளிக்க மாபெரும் சிங்கப்பூர் விற்பனை முற்றிலும் மாற்றங்காண வேண்டியிருப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.

கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருள் வாங்கும் வழக்கத்தை இணைய விற்பனை மாற்றிவருகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மாபெரும் சிங்கப்பூர் விற்பனைக் காலத்தின்போது இணைய விற்பனைத் தளமான Lazada இருமடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது.

விற்கப்படும் பொருட்களையும் அது அதிகரிக்க வேண்டியிருந்தது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு இருமடங்கு வாடிக்கையாளர்களைக் கையாண்டதாக Lazada குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

எதிர்பாராத பிரிவுகளில் விற்பனை அதிகமாய் இருந்ததாக அவர் சொன்னார்.

மாபெரும் சிங்கப்பூர் விற்பனை புதுமையில் கவனம் செலுத்தவேண்டியது மட்டுமின்றி ஆர்வத்தைத் தூண்டும் வேறுபல நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யலாம் என கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மாபெரும் சிங்கப்பூர் விற்பனையில் பங்கேற்கும் வர்த்தகர்கள் பலர் அந்த உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்