Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நோன்புப் பெருநாள் நாளை கொண்டாடப்படும்: முஃப்தி

நோன்புப் பெருநாள் நாளை கொண்டாடப்படும் என முஃப்தி டாக்டர் முகமது ஃபட்ரிஸ் பக்காராம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

நோன்புப் பெருநாள் நாளை கொண்டாடப்படும் என முஃப்தி டாக்டர் முகமது ஃபட்ரிஸ் பக்காராம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சிங்கப்பூரின் கத்தோலிக்கப் பேராயரும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களும் நம்பிக்கை, பாதுகாப்பு ஆகிய அம்சங்களில், நீடித்த உறவை உருவாக்கிக்கொள்ள விடாமுயற்சியுடன் பாடுபட்டு வந்திருப்பதைப் பேராயர் வில்லியம் கோ சுட்டினார்.

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் அவர் அதனைத் தெரிவித்திருந்தார்.

இரு சமயங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து மகிழ்ச்சியோடு இருக்க, பேராயர் கோ தமது வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்