MRT ரயில்களிலும் பேருந்துகளிலும் நோன்புப் பெருநாள் அலங்காரங்கள் (படங்கள்)
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சில MRT ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சில MRT ரயில்களும் பேருந்துகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
அவற்றை நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று அறிமுகம் செய்தது.
நட்பும் உறவும் மலர்வதைப் பிரதிபலிக்க 'பாத்திக்' (batik) வடிவங்களைக் கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டதாக ஆணையம் கூறியது.
நோன்புப் பெருநாள் அலங்காரங்களைக் கொண்ட ரயில்களை இன்றிலிருந்து ஜூலை 3 வரை அனைத்து ரயில்பாதைகளிலும் காணலாம்.
28, 70, 76, 154, 197 ஆகிய பேருந்துச் சேவைகளிலும் அலங்காரங்கள் இடம்பெறும்.
பய லேபார் உள்ளிட்ட சில ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் ஆகியவையும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கெம்பாங்கான்-சாய் சீ , கேலாங் செராய் தொகுதி, SBS Transit, SMRT ஆகியவற்றுடன் இணைந்து அலங்காரங்களுக்கு ஏற்பாடு செய்ததாக ஆணையம் கூறியது.