Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புகைமூட்டம், அடுத்த 24 மணிநேரத்தில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டக்கூடும்

சிங்கப்பூரில் மீண்டும் புகைமூட்டம் காணப்படுகிறது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மீண்டும் புகைமூட்டம் காணப்படுகிறது.

அடுத்த 24 மணிநேரத்தில் அது ஆரோக்கியமற்ற நிலையை எட்டக்கூடும்.

இன்று காலை ஒன்பது மணி நிலவரப்படி காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 82-எனப் பதிவானது.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில், அது 99 ஆகப் பதிவாகி இருந்தது.

இதற்குமுன் சிங்கப்பூரில் மூவாண்டுக்குமுன் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101 என ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் தீ மூட்டப்படும் சம்பவங்கள் தொடர்வது புகைமூட்டத்துக்குக் காரணம்.

காற்றின் திசைக்கேற்ப புகைமூட்டத்தின் கடுமை அதிகரிக்கிறது.

உடல்நிலை சீராக உள்ளவர்கள் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பாக முதியோரும் பிள்ளைகளும் தேவைப்பட்டால் மருத்துவரை நாடும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்