முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு உணவளித்து, ஊக்கமளித்த நிறுவனங்கள்
சிங்கப்பூரிலுள்ள 3 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், சுகாதாரத் துறையின் முன்னணி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரிலுள்ள 3 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், சுகாதாரத் துறையின் முன்னணி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
COVID-19 கிருமிப்பரவல் காரணமாக வர்த்தகம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
அதைப் பொருட்படுத்தாமல், Hai Sia Seafood, Carrara cafe, The White Restaurant ஆகிய 3 நிறுவனங்களும்
அலெக்ஸாண்டிரா மருத்துவமனையின் முதல்அணி ஊழியர்கள் சுமார் 80 பேருக்கு உணவளித்து ஊக்கமளித்தன.
இக்கட்டான காலத்தில் நிறுவனங்கள் தங்களிடம் காட்டிய பரிவும் அக்கறையும் மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக அலெக்ஸாண்டிரா மருத்துவமனை ஊழியர்கள் கூறினர்.