இலங்கைத் தாக்குதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - இந்து அறக்கட்டளை வாரியம்
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்து அறக்கட்டளை வாரியமும், இந்து ஆலோசனை மன்றமும் தெரிவித்திருக்கின்றன.
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்து அறக்கட்டளை வாரியமும், இந்து ஆலோசனை மன்றமும் தெரிவித்திருக்கின்றன.
குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் திடுக்கிடச் செய்ததாக அவை தெரிவித்தன. தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவை குறிப்பிட்டன.
சம்பவம் தொடர்பான அறிக்கை அவற்றின் Facebook பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தங்கள் அனுதாபங்களை அவை தெரிவித்தன.
இந்தச் சிரமமான காலக்கட்டத்தில் எல்லாச் சமயத்தினருடனும் ஒன்றாக இருந்து வலுவான சமூகமாக ஒன்றிணைந்து செயல்படப்போவதாக அவை தெரிவித்தன.
இத்தகைய சம்பவங்கள் சமூகத்தை ஒருபோதும் கூறுபோட்டுவிடாது என்றும் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் உறுதியாகத் தெரிவித்தன.