அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இடம்பெறக்கூடும் : நிதியமைச்சர் ஹெங்
சிங்கப்பூரில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறக்கூடும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறக்கூடும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவுக்கான தமது 11 நாள் பயணத்தின் நிறைவில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
புத்தாக்கம் தழைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, சிங்கப்பூர் அதன் ஒழுங்குபடுத்தும் அணுகுமுறைகளை எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார் அமைச்சர் ஹெங்.
சிங்கப்பூர் அதன் பொருளியலை மறுசீரமைத்துவரும் வேளையில், புதிய தொழில்நுட்பத்தை ஈர்ப்பது, திறனாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய அம்சங்களிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.
அரசாங்கம் அதன் தொடர்பிலான விதிமுறைகளை உருவாக்குவதும், புத்தாக்கத்துக்கான சூழலை ஏற்படுத்தித்தருவதும் அதற்குரிய வழிகளில் ஒன்று என நிதியமைச்சர் கூறினார்.