Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்கள் சொந்த வீடுகள் வாங்க உதவி

வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்கள் சொந்த வீடுகள் வாங்க உதவி

வாசிப்புநேரம் -
வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்கள் சொந்த வீடுகள் வாங்க உதவி

(கோப்புப் படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூரில் பொது வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளை வாங்குவதற்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வளர்ச்சிக்கான துணை அமைச்சர் பைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) அதுபற்றித் தமது Facebook பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்டார்.

2019 டிசம்பரில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அமைத்த 7 பேர் அடங்கிய குழு வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி வழங்கி வருகிறது.

சொந்த வீடுகளை வாங்குவதற்குத் திட்டமிடுதல், போதிய நிதி இருப்பை உறுதிசெய்தல் போன்ற அம்சங்களில் குடும்பங்களுக்கு உதவியளிக்கப்பட்டது.

புதிய வீடுகளை வாங்கிய பின்னரும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனையைக் குழுவினர் தொடர்ந்து வழங்குவார்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்