ஜூரோங் பறவைப் பூங்காவின் சின்னத்திலுள்ள பறவைக்கு வயது 8
ஜூரோங் பறவைப் பூங்காவின் சின்னமாக விளங்கும் சன்னி என்னும் ஹார்ன்பில் பறவைக்கு வரும் சனிக்கிழமையன்று 8 வயது ஆகிறது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஜூரோங் பறவைப் பூங்காவின் சின்னமாக விளங்கும் சன்னி என்னும் ஹார்ன்பில் பறவைக்கு வரும் சனிக்கிழமையன்று 8 வயது ஆகிறது.
2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று பிறந்த இந்தப் பறவை 2016-இல் ஜூரோங் பறவைப் பூங்காவின் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
ஹார்ன்பில் பறவைகள் அவற்றின் அலகிற்காக வேட்டையாடப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் ஹார்ன்பில் பறவையினத்தைப் பாதுகாப்பதற்காக இந்தோனேசியாவில் உள்ள அமைப்புடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது.