நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 17,080 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைந்து வருகிறார்கள்
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,507 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,507 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- அவர்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட 300 பேருக்கு உயிர்வாயு வழங்கப்படுகிறது.
- 46 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
- நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17,080 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைந்து வருகிறார்கள்.
- 2,885 பேர் சமூகப் பராமரிப்பு வசதிகளில் உள்ளனர்.
- 473 பேர் சிகிச்சை அளிக்கப்படும் வசதிகளில் உள்ளனர்.
கடந்த 28 நாள்களில்....
- மருத்துவமனைகளில் உயிர்வாயு சிகிச்சை பெற்றவர்கள் - 1.1 விழுக்காட்டினர்
- தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் - 0.1 விழுக்காட்டினர்
- அவர்களில் 49.6 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்
- 50.4 விழுக்காட்டினர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசியே போட்டுக்கொள்ளாதவர்கள்.