COVID-19 கிருமிப்பரவல்: 67% குடும்பங்கள் இலவச சுவாசக் கவசங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன
COVID-19 கிருமித்தொற்றைத் தொடர்ந்து, ஒரு குடும்பத்துக்கு 4 சுவாசக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
COVID-19 கிருமித்தொற்றைத் தொடர்ந்து, ஒரு குடும்பத்துக்கு 4 சுவாசக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதுவரை, சுமார் 67 விழுக்காட்டுக் குடும்பங்கள் சுவாசக்கவசங்களைப் பெற்றுக்கொண்டதாக மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
1.37 மில்லியன் குடும்பங்கள் சுவாசக் கவசங்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.
இதுவரை பெறாதவர்கள் இம்மாத இறுதிக்குள் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதன்பிறகு மீதமுள்ள சுவாசக் கவசங்கள், தேசிய இருப்புக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும்.
சுகாதார ஊழியர்களுக்கும் தேவைப்படுவோருக்கும் வழங்க அவை பயன்படுத்தப்படும்.