COVID-19: புதிதாக பாதிக்கப்பட்டோரில் மூவர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள்
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய நால்வருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய நால்வருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
அவர்களில் ஒருவர் கஸக்ஸ்தானிலிருந்து (Kazakhstan) திரும்பிய சிங்கப்பூரர்.
எஞ்சிய மூவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். அவர்களில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களும், அவர்களைச் சார்ந்தவரும் அடங்குவர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்குக் கிருமித்தொற்று அறிகுறி ஏதும் தென்படவில்லை. வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்குக் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.