வெளிநாடுகளிலிருந்து வந்த 7 பேருக்கு நேற்று கிருமித்தொற்று - விவரங்கள்
சிங்கப்பூரில் நேற்று கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் நேற்று கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் விவரங்கள்....
சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் - 3
அவர்கள் இந்தியாவிலிருந்தும் பிலிப்பீன்ஸிலிருந்தும் திரும்பியவர்கள்.
சார்ந்திருக்கும் அனுமதி அட்டை வைத்திருப்பவர் - 1
அவர் நேப்பாளத்திலிருந்து வந்தார்.
வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 2
அவர்கள் பிலிப்பீன்ஸிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் வந்தவர்கள்.
குறுகிய - கால வருகை அட்டையின் கீழ் வந்தவர் - 1
அவர் சிங்கப்பூரில் வசிக்கும் தம்முடைய குடும்ப உறுப்பினரைக் காண, இந்தியாவிலிருந்து வந்தார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.