நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த 18 பேர் - விவரங்கள்
நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த 18 பேர் - விவரங்கள்
சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதியான 28 பேரில்18 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் விவரங்கள்...
சிங்கப்பூரர்- 1
சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் - 10
- அவர்கள் இந்தியா, இந்தோனேசியா, ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர்கள்.
வேலை அனுமதிச் சீட்டின்கீழ் - 4
- அவர்கள் இந்தோனேசியாவிலிருந்து இங்கு வந்தவர்கள். நால்வரும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.
வேலை அனுமதி அட்டையின் கீழ் - 1
- மலேசியாவிலிருந்து வந்தவர்.
குறுகியகால விசா அட்டை - 1
- குடும்ப உறுப்பினராக உள்ள சிங்கப்பூரரைக் காண இந்தோனேசியாவிலிருந்து அவர் இங்கு வந்தார்.
சிறப்பு அனுமதி அட்டை - 1
- அவர், மலேசியாவிலிருந்து கப்பலில் வந்த கடலோடி. அவர் கிருமித்தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வதற்குக் கப்பலை விட்டு இறங்கினார். அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியான பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
18 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில் பரிசோதிக்கப்பட்டதாக, அமைச்சு தெரிவித்தது.