அந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
யீஷூன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 451இன் கட்டட முகப்பைச் சுத்தம் செய்துகொண்டிருந்த இரண்டு இந்திய ஊழியர்கள் தொங்குமேடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர்.
யீஷூன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 451இன்
கட்டட முகப்பைச் சுத்தம் செய்துகொண்டிருந்த இரண்டு இந்திய ஊழியர்கள் தொங்குமேடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர்.
அவர்கள் குடிமைத் தற்காப்பு படை வீரர்களின் உதவியால் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தொங்குமேடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் 3ஆம் தள உயரத்தில் ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர் என்றும்
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அவர்கள் அந்தரத்தில் தொங்கினர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
ஒருவருக்குத் தலையில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.