இந்தோனேசியத் தேர்தலுக்கு சிங்கப்பூரில் முன்கூட்டியே வாக்குப் பதிவு
சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் இம்முறை கூடுதலான எண்ணிக்கையில், இங்கிருக்கும் இந்தோனேசியர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் இம்முறை கூடுதலான எண்ணிக்கையில், இங்கிருக்கும் இந்தோனேசியர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.
நேற்று சுமார் 38,000 பேர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளைப் பதிவுசெய்தனர். 2014ஆம் ஆண்டுத் தேர்தலில் அந்த எண்ணிக்கை 22,000ஆக இருந்தது.
முன்கூட்டியே இடம்பெற்ற வாக்குப் பதிவின் நடைமுறைகளில், நேற்று 450 இந்தோனேசியர்கள் உதவினர்.