சமத்துவமின்மையைச் சமாளிப்பதில் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் அணுகுமுறை: அமைச்சர் இந்திராணி
சமத்துவமின்மையைச் சமாளிக்க நான்காம் தலைமுறைத் தலைவர்களின் அணுகுமுறை குறித்துப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கமளித்துள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சமத்துவமின்மையைச் சமாளிக்க நான்காம் தலைமுறைத் தலைவர்களின் அணுகுமுறை குறித்துப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கமளித்துள்ளார்.
சமத்துவமின்மை, சமூகத்தில் தனிநபர் முன்னேற்றம் என்று வரும்போது 'திறமைக்கு முன்னுரிமை' எனும் கொள்கையைக் குறைகூறக்கூடாது என்றார் அவர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த சமூக சேவை ஆய்வுக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
‘திறமைக்கு முன்னுரிமைக்’ கொள்கையை அரசாங்கம் மறு ஆய்வு செய்யவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அந்தக் கோரிக்கை சரியா என்ற கேள்வியை அமைச்சர் எழுப்பினார்.
ஒரு வேலைக்கு முற்றிலும் தகுதியானவரைத் தெரிவுசெய்யும் முறையைக் கைவிடவேண்டும் என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதை அவர் சுட்டினார்.