Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் NTU-இல் கைது

மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது ஆடவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் NTU-இல் கைது

(படம்: TODAY)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது ஆடவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உதவி நாடி நன்யாங் டிரைவ்வில் இருந்து அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒருவரின் மானத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஆடவர் அந்தப் பல்கலைக்கழக்கத்தில் படிக்கும் மாணவர் என்று TODAY அறிகிறது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்