வேன் ஒட்டுநருக்கு தீய எண்ணம் இல்லை - காவல்துறை
சிங்கப்பூர்: அனைத்துலகப் பள்ளிகளில் மாணவர்கள் வாகன ஓட்டுநர்களால் அணுகப்பட்ட சம்பவங்கள் அவர்களைக் கடத்தி செல்லும் நோக்கத்துடன் நடந்தவை அல்லவென்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூர்: அனைத்துலகப் பள்ளிகளில் மாணவர்கள் வாகன ஓட்டுநர்களால் அணுகப்பட்ட சம்பவங்கள் அவர்களைக் கடத்தி செல்லும் நோக்கத்துடன் நடந்தவை அல்லவென்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
UWC South East Asia கல்லூரியிலும் Tanglin Trust பள்ளியிலும் நடந்த இருவேறு சம்பவங்களிலும் வாகன ஒட்டுநர்கள் மாணவர்களுக்கு உதவும் நோக்கத்திலேயே செயல்பட்டதாகக் கூறப்பட்டது.
வாகன ஓட்டுநர் 32 வயது சிங்கப்பூரர்.
மழைபெய்து கொண்டிருந்ததால் மாணவிக்கு உதவும் நோக்கத்தில் அவர் அவ்வாறு கூறியதாக நம்பப்படுகிறது.
நல்ல நோக்கத்துடன் ஓட்டுநர் அவ்வாறு செய்திருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது எனச் சிலர் கூறினர்.