சிங்கப்பூர்த் தொழில்முனைவர்கள் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள புதுச்சேரி ஓர் உகந்த இடம்: புதுச்சேரி முதலமைச்சர்
சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தொழில்முனைவர்கள், புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்குப் புதுச்சேரி ஓர் உகந்த இடமாக இருக்கும் என்று மாநில முதலமைச்சர் வே. நாராயணசாமி கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தொழில்முனைவர்கள், புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்குப் புதுச்சேரி ஓர் உகந்த இடமாக இருக்கும் என்று மாநில முதலமைச்சர் வே. நாராயணசாமி கூறியுள்ளார்.
பல்வேறு தொழில்துறைகளில் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருப்பதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூருக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இங்குள்ள சில நிறுவனங்களையும் அமைப்புகளையும் சந்தித்தார்.