ION Orchard கடைத்தொகுதியில் ஊழியர்களுக்கான கிருமித்தொற்றுப் பரிசோதனை தொடக்கம்
கடைத்தொகுதி மூடப்படும் காலக்கட்டத்திற்கான வாடகையில் கடைக்காரர்கள் தள்ளுபடி பெறுவர் என்று ION Orchard நிர்வாகம் தெரிவித்தது.
ION Orchard கடைத்தொகுதியில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை தொடங்கியுள்ளது.
சுத்திகரிப்புப் பணிகளுக்காக 4 நாள்களுக்குக் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட ஊழியர்கள் மட்டும் புதன்கிழமையிலிருந்து கடைத்தொகுதியில் மீண்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று பிற்பகல் சுமார் 3 மணிக்குப் பரிசோதனை செய்துகொள்வதற்காக ஊழியர்களும் கடைத்தொகுதிக்குச் சென்றனர்.
அவர்களுக்கான பரிசோதனை கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றது.
கடைத்தொகுதி மூடப்படும் காலக்கட்டத்திற்கான வாடகையில் கடைக்காரர்கள் தள்ளுபடி பெறுவர் என்று ION Orchard நிர்வாகம் தெரிவித்தது.