கருவிழிப் படலம், முக அடையாளம் ஆகியவற்றைக் கொண்டு புதிய சோதனை முறை
துவாஸ் சோதனைச்சாவடியில் கருவிழிப் படலம், முக அடையாளம் ஆகியவற்றின் விவரங்களைப் பயன்படுத்தும் புதிய திட்டத்திற்கான சோதனை நடைபெற்றுவருகிறது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
துவாஸ் சோதனைச்சாவடியில் கருவிழிப் படலம், முக அடையாளம் ஆகியவற்றின் விவரங்களைப் பயன்படுத்தும் புதிய திட்டத்திற்கான சோதனை நடைபெற்றுவருகிறது.
இம்மாதம் 8ஆம் தேதியன்று தொடங்கிய அந்தச் சோதனையின் கீழ், சிங்கப்பூரர்கள் முதலில் பயனடைவர்.
6 மாதக் காலத்திற்கு அது சோதிக்கப்படும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பேருந்துகளுக்கான தானியக்கத் தடத்தில் புதியமுறை சோதிக்கப்படுகிறது.
அதற்குப் பயணிகளின் கைரேகையோ கடப்பிதழோ தேவையில்லை; கருவிழி, முக அடையாளம் போதும்.