Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்ளூரில் அதிகரிக்கும் கிருமிப்பரவல் - வரும் 13 ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்படாது இஸ்தானா

உள்ளூரில் அதிகரிக்கும் கிருமிப்பரவல் - வரும் 13 ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்படாது இஸ்தானா

வாசிப்புநேரம் -

இஸ்தானா வரும் 13 ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறந்து விடப்படாது என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மே தினம், நோன்புப் பெருநாள் ஆகிய பொதுவிடுமுறைகளை முன்னிட்டு இஸ்தானா வரும் 13 ஆம் தேதி திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களாக, கிருமித்தொற்றுச் சூழல் நிலைப்பட்டதால், இஸ்தானாவைக் படிப்படியாகத் திறப்பதற்குத் திட்டமிட்டதாக அலுவலகம் கூறியது.

இருப்பினும், அண்மை நாள்களில் கிருமிப்பரவல் உள்ளூரில் அதிகரித்துவருவதால், முன்னெச்சரிக்கையாக நிகழ்வை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.

நிலைமை மேம்பட்டவுடன், இஸ்தானாவுக்கு மீண்டும் வருகையாளர்களை வரவேற்பதற்கு காத்திருப்பதாக அதிபர் அலுவலகம் சொன்னது.

இஸ்தானாவுக்கு செல்லும் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றிருந்தோர், அவற்றை அடுத்த முறை பயன்படுத்த இயலும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்