தடையற்ற வர்த்தகத்துக்கான கடப்பாட்டை அறிவித்தது சிங்கப்பூர்
சிங்கப்பூர், தடையற்ற வர்த்தகத்துக்கான அதன் கடப்பாட்டைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
சிங்கப்பூர், தடையற்ற வர்த்தகத்துக்கான அதன் கடப்பாட்டைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
தன்னைப்பேணித்தனப் போக்கு தொடர்பில், அனைத்துலகப் பலதரப்பு வர்த்தக முறை மிரட்டல்களை எதிர்நோக்குகிறது.
அவற்றிலிருந்து பாதுகாக்க, தடையற்ற வர்த்தகத்துக்கு சிங்கப்பூர் அதன் கடப்பாட்டைத் தெரிவித்துக்கொண்டது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் வேளையில், பிரசல்ஸ் சென்றிருக்கும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் S. ஈஸ்வரன் அது பற்றிப் பேசினார்.
இவ்வாண்டு இறுதியில் அந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஒப்பந்தம் வர்த்தகங்களுக்குப் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம் என அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.