ஆந்திரப் பிரதேச முதலமைச்சருடன் திரு. எஸ். ஈஸ்வரன் சந்திப்பு
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசினார்.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசினார்.
உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திரு. சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் வந்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் நிலவும் நல்ல முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் கலந்துரையாடினர்.
அந்த வரிசையில், மூன்று அம்சங்களைப் பற்றி இருவரும் பேசினர்.
ஆந்திரப் பிரதேச மக்களின் திறன்களை மேம்படுத்துவது, அமராவதியின் வர்த்தகத் திட்டம், இரு வட்டாரங்களுக்கு இடையே உள்ள விமானச் சேவைகளை அதிகரித்தல் ஆகியவை அவை.
உச்சநிலை மாநாட்டில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் இரு முறை உரையாற்றினார்.
ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் அதிகப் பங்களிப்பை அமைச்சர் ஈஸ்வரன் பாராட்டினார்.