சிங்கப்பூரின் ஆக உயரிய தேசிய விருதைப் பெற்றுள்ளார் திரு. J. Y. பிள்ளை
அதிபர் ஆலோசகர் மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு. J. Y. பிள்ளைக்கு, ஆக உயரிய Order of Temasek விருது வழங்கப்பட்டுள்ளது.
அதிபர் ஆலோசகர் மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு. J. Y. பிள்ளைக்கு, ஆக உயரிய Order of Temasek விருது வழங்கப்பட்டுள்ளது.
2005லிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை அவர், அதிபர் ஆலோசகர் மன்றத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
அதிபர் ஹலீமா யாக்கோபிடமிருந்து தேசிய தின விருதைப் பெற்றுள்ள சுமார் ஐயாயிரம் பேரில் திரு. J. Y. பிள்ளையும் ஒருவர்.
கலை, சட்டம், அரசாங்கச் சேவை உட்பட பல்வேறு துறைகளில் சமூகத்துக்குப் பங்காற்றிய தலைவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அதிபர் ஆலோசகர் மன்றத்தின் உறுப்பினருமான லிம் சீ ஓன்னுக்கு (Lim Chee Onn) Order of Nila Utama விருது வழங்கப்பட்டது.