Uniqlo கடையிலிருந்து திருடிய வியட்நாமிய நாட்டினர் நால்வருக்குச் சிறை
Uniqlo கடைகளிலிருந்து 1,400க்கும் அதிகமான துணிகளைத் திருடிய வியட்நாமிய நாட்டினர் நால்வருக்கு இன்று (டிசம்பர் 17) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருடிய துணிகளின் மதிப்பு சுமார் 44,600 வெள்ளி.
Uniqlo கடைகளிலிருந்து 1,400க்கும் அதிகமான துணிகளைத் திருடிய வியட்நாமிய நாட்டினர் நால்வருக்கு இன்று (டிசம்பர் 17) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருடிய துணிகளின் மதிப்பு சுமார் 44,600 வெள்ளி.
சிங்கப்பூருக்கு வர விசா தேவையில்லை என்பதால் அவர்கள் இங்கு வந்தனர்.
சிங்கப்பூரில் திருடிய துணிகளை வியட்நாமில் விற்க அவர்கள் திட்டம் கொண்டிருந்தனர்.
Uniqlo கடைகளில் விற்கப்படும் துணிகளில் உணர்கருவி அட்டைகள் இருக்காது என்று கேள்விப்பட்டதால் அக்கடையைத் தேர்ந்தெடுத்ததாக அவர்கள் கூறினர்.
மூவருக்கு ஓராண்டு 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய நபருக்கு ஓராண்டு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.