மின்சைக்கிள்கள் மீது மோதிய கனரக வாகன ஓட்டுநருக்கு 12 வாரச் சிறை
கனரக வாகன ஓட்டுநரான 36 வயது சகாதேவன் செங்குட்டுவனுக்கு 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகன ஓட்டுநரான 36 வயது சகாதேவன் செங்குட்டுவனுக்கு 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த அவருக்கு, வாகனமோட்ட 5 ஆண்டுத் தடையும் விதிக்கப்பட்டது.
மூன்று மின்சைக்கிள் ஓட்டுனர்கள் மீது அவர் மோதிய சம்பவத்தில் இருவர் மாண்டனர், ஒருவர் காயமுற்றார்.
அந்த விபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்னால் வெஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் நடந்தது.
கவனக்குறைவால் மரணம் விளைவித்த குற்றத்திற்காக சகாதேவனுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.