Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்

ஜூரோங் தொழிற்பேட்டை வட்டாரத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒருவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -

ஜூரோங் தொழிற்பேட்டை வட்டாரத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒருவர் மாண்டார்.

அதில் நூற்றுக்கணக்கான எரிவாயுத் தோம்புகள் சம்பந்தப்பட்டிருந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இரண்டு காற்பந்துத் திடல்களின் அளவுக்கு நெருப்பு எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

43 ஜாலான் புரோவில் தீ ஏற்பட்டது பற்றி மாலை 5.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீக்காயத்துக்கு ஆளான இரண்டு ஊழியர்கள் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்