ஜூரோங் பேருந்து விபத்து - மோட்டார்சைக்கிளோட்டி மரணம்
ஜூரோங்கில் நேற்று(ஜூன் 15) நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்த 59 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.
ஜூரோங்கில் நேற்று(ஜூன் 15) நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்த 59 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.
மோட்டார்சைக்கிளும் ஈரடுக்குப் பேருந்தும் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன. கார்ப்பரேஷன் ரோட்டிற்கும் ஜாலான் அமாட் இப்ராஹிம் சாலைக்கும் இடைப்பட்ட சந்திப்பில் நேற்றுப் பிற்பகல் 12.30 மணியளவில் விபத்து நடந்தது.
காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மாண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.