புதிய கம்போங் பாரு பேருந்து முனையம் மார்ச் 10ஆம் தேதி திறப்பு
புதிய கம்போங் பாரு பேருந்து முனையம் மார்ச் மாதம் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
புதிய கம்போங் பாரு பேருந்து முனையம் மார்ச் மாதம் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய நியூ பிரிட்ஜ் ரோடு பேருந்து முனையத்திற்குப் பதிலாக அது செயல்படும்.
புதிய முனையம் அனைவரும் தடையின்றிப் பேருந்தில் ஏறி, இறங்குவதற்கான வசதிகளைக் கொண்டிருக்கும். கூரையுடன் கூடிய இணைப்புப் பாதைகளை முதியோர், நடமாடச் சிரமப்படுவோர், இளம் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் என்று அனைவரும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
தற்போதைய முனையம் உள்ள இடத்தில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் புதிய சுகாதாரப் பராமரிப்பு மையம் அமையவிருக்கிறது.