காணாமற்போன சிங்கப்பூரர்களின் படகு கண்டுபிடிக்கப்பட்டது
ஜொகூரின் மெர்சிங் நகரில் காணாமற்போன இரு சிங்கப்பூரர்களின் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜொகூரின் மெர்சிங் நகரில் காணாமற்போன இரு சிங்கப்பூரர்களின் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை எண்டாவ் தீவுகளுக்கருகே படகோட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேரில் திரு. டான் இங் சூன், திருவாட்டி புவா கியோக் இருவரும் காணாமற்போயினர்.
பலத்த காற்று, கடல் அலைகளின் சீற்றம் ஆகியவற்றினால் அவர்கள் இருவரும் குழுவிலிருந்து பிரிந்து சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
குவாந்தானில் மீனவர் ஒருவர் படகுடன், தனது தாயாரின் உடைமைகள், திரு. டானின் உடைமைகள், அவரது கைத்தொலைபேசி ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாய் திருவாட்டி புவாவின் மகன் Instagramஇல் பதிவிட்டுள்ளார்.
பின்னர் திரு. டானின் கைத்தொலைபேசியிலிருந்து குடும்பத்தினருக்கு மீனவர் குறுஞ்செய்தி அனுப்பினார்.
அதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு அது குறித்துத் தகவல் தந்தனர்.
எண்டாவ் தீவுகளிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது குவாந்தான்.