Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலர் பள்ளியில் பயிலும் இருவர் தனிமைப்படுத்தப்பட உத்தரவு - வளாகத்தில் துப்பரவுப்பணிகள்

St James' தேவாலய பாலர் பள்ளியில் பயிலும் இருவர், COVID-19 கிருமிப் பரவல் காரணமாகத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டனர்.

வாசிப்புநேரம் -

St James' தேவாலய பாலர் பள்ளியில் பயிலும் இருவர், COVID-19 கிருமிப் பரவல் காரணமாகத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி, அதன் கில்ஸ்டிட் (Gilstead) வளாகத்தைச் சுத்தப்படுத்தி, கிருமி நீக்கம் செய்து வருகிறது.

அந்தக் குழந்தைகள் இருவரின் உறவினருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவருடன் குழந்தைகளுக்குத் தொடர்பு இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் இருவரும், அவர்களின் பெற்றோரும் சீரான நிலையில் இருப்பதாகப் பாலர் பள்ளியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட யாருடன் குழந்தைகளுக்குத் தொடர்பு இருந்தது என்பது பற்றி அவர் அடையாளம் சொல்லவில்லை.

சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்தால், இன்று பாலர் பள்ளி செயல்படத் தொடங்கும்.

கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதாக, St James' தேவாலய பாலர் பள்ளி தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்