மனநலக் கழகத்தில் 100க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
சிங்கப்பூரின் மனநலக் கழகத்தில் கிருமித்தொற்றுக் குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மனநலக் கழகத்தில் கிருமித்தொற்றுக் குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அங்கு 108 நோயாளிகளும் 8 ஊழியர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர், புளோக் 4, 5, 6 ஆகியவற்றில் நீண்ட காலப் பராமரிப்பில் உள்ள நோயாளிகள்.
பாதிக்கப்பட்ட வார்டுகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை.
கிருமித்தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதியான பிறகே குணமடைந்த நோயாளிகள், வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
நீண்ட கால பராமரிப்பில் உள்ள நோயாளிகளில், 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மனநலக் கழகம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளுக்கு Booster தடுப்பூசி போடும் பணிகளும் தொடர்வதாகக் கூறப்பட்டது.