விடுமுறையில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளமுடியாது என்றாலும் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்கலாம்: பிரதமர் லீ
பள்ளி விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளமுடியாது என்றாலும், குடும்பங்கள், சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்கலாம் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
பள்ளி விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளமுடியாது என்றாலும், குடும்பங்கள், சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்கலாம் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
ஆண்டு இறுதி விடுமுறை இன்று தொடங்கியதையொட்டித் திரு. லீ தம்முடைய Facebook பதிவில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"சவால்மிக்க ஆண்டுக்குப் பிறகு, ஆசிரியர்களும் மாணவர்களும் விடுமுறையைத் தொடங்க ஆவலாய் இருந்திருப்பார்கள். இவ்வாண்டு, கிருமிப்பரவலால் ஏற்பட்ட சிரமங்களைச் சமாளித்து, கற்றல் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்த அனைவருக்கும் பாராட்டுகள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. என்றாலும், சிங்கப்பூரின் இயற்கையைக் கண்டு ரசிக்க அடுத்த மாதம் வழங்கப்படவிருக்கும் பற்றுச் சீட்டு உதவும் என்று பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.